தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு 50% இடஒதுக்கீடு – கோரிக்கை மனு!
தமிழகத்தில் அரசு பணியில் பெண்களுக்கு வழங்கப்படும் 40% உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, அரசு தேர்வுக்கு தயாராகும் ஆண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனு:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது. இந்த அரசு பணிகள் தேர்வில் பெண்களுக்கு ஏற்கனவே 30 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு திமுக ஆட்சிக்கு வந்தால் 40% ஆக அதிகரிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
நடப்பு ஆண்டிற்குள் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் திட்டம்!
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிகம் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த அறிவிப்பால் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் அரசு தேர்வுக்கு தயாராகும் ஆண்கள் அரசு பணியில் பெண்களுக்கு வழங்கப்படும் 40% உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு – மாலை நிலவரம்!
பெண்களுக்கு 40 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஆண்களின் அரசு பணி கனவு பறிபோகும் நிலை ஏற்படும். 30 சதவீதம் என்ற நிலையிலேயே பெண்களின் பணி வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது 40 சதவிகிதம் என்ற உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் ஆண்களின் பணி மிகவும் பாதிக்கப்படும். எனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் சரிசமமாக (50%) இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுவை ஏற்று உரிய வழியில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.