வழிபாட்டு தலங்களில் 50% பார்வையாளர்கள் அனுமதி – மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மகாராஷ்டிரா அரசு மக்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வழிபாட்டு தலங்களில் தற்போது 50% மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, 3,063 பேருக்கு புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 65,50,856 ஆகவும், பலி எண்ணிக்கை 1,39,067 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவின் எட்டு மாவட்டங்களில் மும்பை 906 பேர், புனே 1,004, நாசிக் 677, கோலாப்பூர் 303, லத்தூர் 89, அவுரங்காபாத் 57, நாக்பூர் 19 மற்றும் அகோலா பகுதி 8 பேர் என்று தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – திங்கள் முதல் விநியோகம்!
இந்த அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி, துர்கா பூஜை, ஈத்-உல் மிலாத், வால்மீகி ஜெயந்தி போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு மாநில அரசு நேற்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைத்துள்ளது. முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற அனைத்து கோவிட் நெறிமுறைகளையும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் 9 மாவட்ட மக்கள் கவனத்திற்கு – உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டுதல்கள்!
மேலும், இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று மாநில அரசு முன்பு அறிவித்திருந்தது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சூழலுக்கு தகுந்தாற்போல் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.