தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள் – முதல்வர் கடிதம்!
தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் சிறப்பு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மக்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் உயிரிழப்பில் இருந்து 97% வரை தடுக்கிறது. தற்போதைக்கு கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் – முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தமிழகத்தில் மொத்தம் 28 லட்சம் பேர் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும் நேற்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 4.80 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பல் – அமைச்சர் தகவல்!
இந்த நிலையில் வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். வாரத்திற்கு ஆறு நாட்கள் 5 லட்சமும், 7ம் நாள் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி கூடுதல் தடுப்பூசிகளை கோரியுள்ளார்.