புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்? உத்தரவு வாபஸ்!
செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அவ்வாறு வழங்கப்பட உத்தரவு இன்று திரும்ப பெறப்பட்டது.
5 ஆண்டு இன்சூரன்ஸ்:
சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானதாக கருதப்படுகிறது. ஒகேனக்கல்லில் சாலை விபத்தில் இறந்த சடையப்பன் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு சடையப்பன் குடும்பத்திற்கு 14,65,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
BE சிறப்பு கலந்தாய்வு, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
அதனை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என்று அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனை போக்குவரத்து துறை இணை ஆணையர் மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதை அமல்படுத்த 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என பொது காப்பீட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்தது.
Jioவின் ரூ.75 மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் – புதிய அறிமுகம்!
இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு வழக்கு விசாரணை 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. செப்.1-க்கு பிறகு விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.