மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை – முழு விவரம் இதோ!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை - முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை - முழு விவரம் இதோ!
மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை – முழு விவரம் இதோ!

மாநில அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முயற்சியில், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை கொள்கையை அமல்படுத்தி சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாரம்

இந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கான 4 நாட்கள் வேலை நாள் உட்பட பல்வேறு புதிய கொள்கைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மாநில அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முயற்சியில், சத்தீஸ்கர் அரசாங்கம் 5 நாள் வேலை வாரக் கொள்கையை அமல்படுத்தி கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

IPL 2022: தோனி கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடுவதே எனது கனவு – சேத்தன் சகாரியா பேட்டி!

இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், ‘சத்தீஸ்கரின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 5 நாள் வேலை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வாரந்தோறும் சனிக்கிழமைகள் விடுமுறையாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கடந்த மாதம் குடியரசு தின உரையின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கான ஐந்து வேலை நாட்கள் கொள்கையை அறிவித்திருந்தார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! தலைநகர் முற்றுகை!

இப்போது வாரத்தில் 5 நாள் வேலை வாரம் தொடர்பாக பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைமை செயலகம், துறைத் தலைவர் முதல் அனைத்து கள அலுவலகங்களின் அலுவலர்களுக்கும் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை வேலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஊழியர்களுக்கு மதிய உணவு இடைவேளை நேரம் மாறாமல் வழக்கம் போல உள்ளது. இதற்கிடையில், மாநில அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளின் பிற்பகல் நேரங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 2022 ஆம் நிதியாண்டில் இந்தியா நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை கொண்டு வர வாய்ப்புள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, பணி கலாச்சாரம், வேலை நேரம் மற்றும் வார நாட்களின் எண்ணிக்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. மேலும், இப்போது ஐந்து நாள் வேலை வாரத்தைப் பெறும் ஊழியர்கள் இனி நான்கு நாள் வாரத்தை அனுபவிக்கலாம். இருப்பினும் அவர்கள் தினசரி அடிப்படையில் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!