IPL 2022 – மெகா ஏலத்தில் பங்கேற்கும் 5 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்! இஷான் கிஷன் முதல் ஜானி பேர்ஸ்டோவ் வரை
ஐபிஎல் 15 வது சீசனுக்கு முன், வரும் 12,13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. 10 அணிகளில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இல்லாத அணிகள் மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர்களை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL மெகா ஏலம்:
இந்த ஆண்டு மெகா ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 15 IPL தொடருக்காக மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 590 வீரர்களில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும், 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் மெகா ஏலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 370 இந்தியர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது – கால அவகாசம் நிறைவு!
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து IPL தொடரில் கடந்த ஆண்டு 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடி வந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக இணைகின்றன. இதனால் இம்முறை IPL ஏலம் மெகா ஏலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் சில அணிகளில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தினால் மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர்களை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த ஆண்டு மெகா ஏலத்தில் சிறந்த 5 விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள் தங்களது பெயரை பதிவிட்டுள்ளார்கள். அதில் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கவீரரான இஷான் கிஷான் , இதற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ , வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் , தென்னாபிரிக்கா அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் மற்றும் இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ்ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று கூறப்படுகிறது.