சென்னைவாசிகள் கவனத்திற்கு..! வாரத்தின் 5 நாட்கள் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கம்!
சென்னையில் கும்மிடிப்பூண்டி – தாம்பரம் – செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வாரத்தில் 5 நாட்கள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்கள்:
தமிழகத்தில் கொரோனா பேரிடரால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பேருந்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் பயணிகள் வருகை இல்லாததால் முக்கிய சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்ரோ ரயில்களும் நிறுத்தப்பட்டது. அதன்படி, சென்னை புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. நோய்த்தடுப்பு களப்பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணித்து வந்தனர். ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக மின்சார ரயில்களும் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 4 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி – தாம்பரம் – செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வாரத்தின் 5 நாட்கள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் காலை 6 மணிக்கு புறப்படும் காலை 9.45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் எனவும், செங்கல்பட்டிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மதியம் 1.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாலை 5.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும் தாம்பரம் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மாலை 5.58 புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.