தமிழகத்தில் 5 பள்ளிகள் மூடல் – மாணவர், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு குறைந்ததை அடுத்து சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தீவிர ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி செப்டம்பர் 1ம் தேதி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் 9 முதல் 12ம் உயர் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை சமர்ப்பிக்க அரசு அறிவுறுத்தியது.
கோவை தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு – நாளை விடுமுறை விட தேவையில்லை!
மேலும், தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு உத்தரவின் படி, செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளி திறந்த பின்னர் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில முதல்வர் விஜய் ராம்னிக்லால் ரூபானி – இன்று திடீர் ராஜினாமா!
அங்குள்ள ஆவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மூன்று மாணவர்கள், ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒரு மாணவர், பெரியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு ஊழியர், தொரப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர், போளூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் என ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளிகளை மூன்று நாட்கள் தொடர்ந்து மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.