தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – 95% ஆய்வுப்பணி நிறைவு! அமைச்சர் தகவல்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - 95% ஆய்வுப்பணி நிறைவு! அமைச்சர் தகவல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - 95% ஆய்வுப்பணி நிறைவு! அமைச்சர் தகவல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – 95% ஆய்வுப்பணி நிறைவு! அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கூட்டுறவு துறையில் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 95 சதவிகித பணி முடிவடைந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கி நகைக்கடன்:

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை சார்பில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கிகளில் முக்கிய நோக்கம் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. மேலும் உறுப்பினர்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும். மேலும் இந்த வங்கி மூலமாக குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா தொற்று – நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தல்!

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன்களில் பல மோசடி நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தற்போது அதற்கான 95 சதவிகித ஆய்வு பணி முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் ரூ.2,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 7 லட்சம் விவசாயிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு இதுவரை ரூ.700 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ‘ஓமைக்ரான்’ காரணமாக டிச.15 வரை விடுமுறை!

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான 12 சதவீத வட்டி 7 சதவீதமாக ஆக குறைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் 75 கூட்டுறவு மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!