தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு நகைகள் கடந்தார்களுக்கு கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் படி தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் அரசு நிபந்தனைகளில் அடிப்படியில் தகுதியானவர்களுக்கு மட்டும் 5 பவுனுக்குட்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து நகைக்கடன் பெற தகுதியானவர்களை கண்டறிய கூட்டுறவு சங்கங்ககளில் நகைக்கடன் வைத்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு டிச.27ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் நகைக்கடன் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்ககளிலும் நகைக்கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள குழு அமைகளோடு முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 மார்ச் 31ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை கடனை தள்ளுபடி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் நிறைவுபெற்று விட்டன என்று தெரிவித்துள்ளார்.

இன்று முதல் தினசரி 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அடகு வைத்த நகைகளை திரும்ப கொடுப்பதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. எனவே பொங்கல் பண்டிகைக்கு முன்பு நகைகள் திரும்ப கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், கூட்டுறவுத்துறை மூலம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டியுள்ளதால் நிதி நிலையை பொறுத்து பொங்கல் பரிசு தொகை குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!