சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு – அரசுக்கு வலியுறுத்தல்!
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம்:
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் சாதியை ஒழிக்கும் நடவடிக்கையை அரசு செயல்படுத்தலாம். சாதி, சமயம் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதே அரசின் நோக்கமாக இருந்து வந்தது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாட்டில் சாதி என்ற ஒற்றை வார்த்தையில் மக்களிடையே வேற்றுமை நிலவுகிறது.
தேசிய அளவில் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் – கடந்த 5 ஆண்டுகளில் 18% உயர்வு!
மேலும் சாதி ஒழிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த ஊக்க பரிசுத்தொகையும் நிறுத்தப்பட்டது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எதிர்ப்புகளை தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது. இது கண்டனத்திற்கு உரியது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசு இதனை கவனத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட சாதி மறுப்பு திருமண பரிசுத்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். இதன் மூலம் அமைதி புரட்சியாக சாதி ஒழிப்பு பணி நடைபெற்று நாட்டு மக்கள் ஒற்றுமையாக மாறிட வாய்ப்பு ஏற்பட கூடும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.