நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் – Google வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!
இணையதளங்கள் வாயிலாக மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு 5 முக்கிய மோசடிகள் குறித்து எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மோசடி:
உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்யலாம். அந்த அளவிற்கு இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. இது ஒரு புறம் நன்மையாக இருந்தாலும் மற்றொரு புறம் அதிக மோசடிகள் இதன் மூலம் நடந்து வருகிறது. இன்றைக்கு நாம் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முதல் விட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் பெறுகிறோம்.
Follow our Instagram for more Latest Updates
இதனை குறி வைத்து மோசடியாளர்கள் ஆஃபர்கள் என்ற பெயரில் பணம் கையாடல், டேட்டாக்களை திருடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து கூகுள் முக்கிய பதிவை வெளியிடுள்ளது. பொதுவாக விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் ஷாப்பிங் செய்ய முன் வருவர். இந்த நேரத்தை பயன்படுத்தி மோசடி கும்பல் பரிசு கூப்பன், இலவசம்,தள்ளுபடி என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர்.
2022 ஆம் ஆண்டிற்கான “கன்னட தேசிய குவெம்பு விருது” – எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதனால் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து கிரிப்டோ அடிப்படையிலான மோசடிகளும் சமீப காலமாக நிகழ்ந்து வருகிறது. மேலும் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நன்கொடை வேண்டும் என்று கூறி தேவையில்லாத லிங்குகளை அனுப்பி பணம் பறித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து போலி மின்னஞ்சல்கள், ஆண்டி வைரஸ் புதுப்பித்தல் என்று போலியான செய்திகளை கூறி மோசடி நடந்து வருகின்றனது. அதனால் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.