சென்னையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்கள் பறக்க தடை!

0
சென்னையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு - ட்ரோன்கள் பறக்க தடை!
சென்னையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு - ட்ரோன்கள் பறக்க தடை!
சென்னையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்கள் பறக்க தடை!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளை 74 வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டப்பட இருக்கும் நிலையில், சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா:

நாட்டின் 74வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். அதன் பின் முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை செய்வார்கள். பின் முதல்வர் ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் விருதுகளை வழங்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிப்பு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில் சென்னையில் 6,800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்துமுனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள்மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும் (ஜனவரி 25) நாளையும் (ஜனவரி 26) சென்னையில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!