வங்கிகளில் இருந்து 90 நாட்களில் ரூ.5 லட்சம் வரை பெறும் வசதி – மத்திய அரசு!
இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகள் உட்பட அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் 3 மாதத்தில், அதாவது 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளும் வகையில் புதிய வசதிகளை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி சேவை
இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பணம் பெறுவது, அனுப்புவது, பரிமாற்றம் உள்ளிட்ட பல வகையான சேவைகள் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி வரும் நாட்களில் வங்கி வாடிக்கையாளர்கள், 90 நாட்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளும் வகையில் புதிய வசதிகள் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 48% பெற்றோர்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை!
அந்த வகையில் வைப்புத்தொகை காப்பீட்டு கடன் உத்தரவாத கழகம், இந்த சட்டத்தில் திருத்தங்களை செயல்படுத்த அனுமதித்துள்ளது. இதன் கீழ் வங்கிகளில் வைப்புத்தொகை கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களின் மொத்த வைப்புகளில் இருந்து 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இதன் மூலம் 98.3 சதவீத வங்கிக் கணக்குகள் சட்டத்திற்குள் முழுமையாக பாதுகாக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் வங்கிகளின் மீதான தடைகளை ரிசர்வ் வங்கி நீக்கும் வரை, வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு தங்கள் நிதியை பூஜ்ஜியமாக அணுகுவதற்கான சிக்கல்களுக்கு இந்த சட்டம் தீர்வு அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வைப்புத்தொகை காப்பீட்டு முறை இந்தியாவில் உள்ள அனைத்து பொது, தனியார், கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கிகளையும் உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.