கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு – மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனா தொற்றால் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ காப்பீடு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை வயதானவர்களை அதிகம் பாதிப்படைய செய்தது. ஆனால் இரண்டாம் அலை அனைத்து வயதிரையும் தாக்குகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்துள்ளனர். இளம் வயதில் தங்களை பாதுகாக்க பெற்றோர்கள் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் பாதுகாவலர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனால் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு கொரோனா நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. மேலும் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த உதவி திட்டங்கள் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகள் எதிர்காலத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும். அது மருத்துவ செலவுகள், கல்வி செலவுகள் போன்றவற்றிற்கு அரசின் நிதி குழந்தைகளுக்கு பேருதவியாக இருக்கும். அவர்கள் 23 வயது அடையும் போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பிஎம் கேர்ஸ் நிதி மூலம் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிகளில் வைப்புத்தொகை செலுத்தப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.