தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் 5 லட்சம் காலி பணியிடங்கள் – வேலை தேடுவோருக்கு சூப்பர் சான்ஸ்!
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் சுமார் 5 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்க, கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் வேலை தேடுபவர்களுக்கும் மற்றும் வேலை வழங்குபவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் 26, 2022 ஆம் தேதி நிலவரப்படி, இந்த இணையதளத்தில் வேலை வழங்க கூடிய நிறுவனங்களின் எண்ணிக்கை 2,01,633 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள சுமார் 4,82,264 காலிப்பணியிடங்களை நிரப்ப பதிவு செய்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 3,20,917 ஆக இருந்தது. இந்த இணையதளத்தில் நிதி மற்றும் ஆயுள் காப்பீடு சேவை, ஆப்ரேஷன்/சப்போர்ட், விடுதி/உணவு மற்றும் கேட்டரிங், சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பல வேலைவாய்ப்புகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை வென்ற ஸ்வான்டே பாபோ – அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
எனவே மாநிலம் முழுவதும் படித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞர்கள், இந்த இணையதளம் மூலமாக தங்களுடைய விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ncs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்