சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்க – 5 லட்சம் பேர் பதிவு!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் 5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு
கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டுமாணவர்களுக்கு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து மீண்டுமாக பள்ளிகள் செயல்பட துவங்கின.
TN Job “FB Group” Join Now
ஆனால் எதிர்பாராத விதமாக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் மே மாதம் 4ஆம் தேதி துவங்கி ஜூன் 21 ஆன் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் உயர்வு – அறிவிப்பு வெளியீடு!!
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சிபிஎஸ்இ தேர்வு நடத்தும் முடிவை மாற்றலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 5 லட்சம் பேர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். இது தவிர சிபிஎஸ்இ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு அந்த மனுவை சிபிஎஸ்இ தேர்வு வாரியத்துக்கு அனுப்பியுள்ளனர்.