முல்லையின் வயிற்றில் தங்காத கரு, வீணான 5 லட்ச ரூபாய் சிகிச்சை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ட்விஸ்ட்!

0
முல்லையின் வயிற்றில் தங்காத கரு, வீணான 5 லட்ச ரூபாய் சிகிச்சை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ட்விஸ்ட்!
முல்லையின் வயிற்றில் தங்காத கரு, வீணான 5 லட்ச ரூபாய் சிகிச்சை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ட்விஸ்ட்!
முல்லையின் வயிற்றில் தங்காத கரு, வீணான 5 லட்ச ரூபாய் சிகிச்சை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ட்விஸ்ட்!

தற்போது முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் கரு வயிற்றில் தங்கவில்லை என்பதை முல்லை உணர்ந்து தனத்திடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது தான் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தற்போது முல்லைக்கு செயற்கைமுறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சிகிச்சை வெற்றி பெறுமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தன்னால் கருவுறவே முடியாதா, ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்று கொடுக்க முடியாதா என மிகவும் வருத்தத்தில் இருந்தார். பின்பு தான் குடும்பத்தினர்கள் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர்.

Exams Daily Mobile App Download

செயற்கைமுறை சிகிச்சைக்காக மட்டுமே 5 லட்சம் வரைக்கும் செலவு செய்துள்ளனர். ஆனால் இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை சில பேருக்கு மட்டுமே முதல் சிகிச்சையிலேயே வெற்றியை கொடுக்கும். கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கும் என சொல்ல முடியாது. ஒருவேளை இந்த கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்கள். இந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ரெடி செய்யவே குடும்பத்தினர்கள் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ ஆல்யா மானசா ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – இனி சீரியலில் நடிக்க மாட்டார்!

5 லட்ச ரூபாய் வரைக்கும் கடன் வாங்கியதால் வீடு கட்டுவதை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கண்டிப்பாக இந்த சிகிச்சை எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என குடும்பத்தினர்கள் வேண்டி இருக்கின்றனர். கரு முல்லையின் வயிற்றில் தங்கியுள்ளதா என்பதை ஒரு மாதம் கழித்து தான் அறிந்துகொள்ள முடியும் என மருத்துவர் கூறுகிறார். இந்நிலையில், கரு வயிற்றில் தங்கவில்லை என்பதை முல்லை உணர்ந்து தனத்திடம் கூறுகிறார். அப்போ 5 லட்சம் வீணாகிவிட்டதா என தனம் கவலை படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!