அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி – அசத்தும் இந்தியர்கள்!
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைத்தேர்தல் கடந்த 8ம் தேதி அன்று நடைபெற்றது. அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 5 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தியர்கள் வெற்றி:
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இடைக்கால தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 8-ம் தேதி அன்று அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் இடை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து வாக்கு பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. செனட் சபையில் 21 இடங்கள் டிரம்பின் குடியரசு கட்சிக்கும், 14 இடங்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கும் உரியது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் செனட் சபையில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் சம நிலையில் வெற்றி பெற்றுள்ளனர் .
Exams Daily Mobile App Download
இதே போல் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 199 இடங்களும், ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கு 178 இடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து 58 இடங்களுக்கு இன்னும் தேர்தல் முடிவுகள் வெளிவர வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த அமி பெரோ, ராஜா கிருஷ்ணா மூர்த்தி, ஸ்ரீ தனேதர், ரோகித் கன்னா, பிரமீளா ஜெயபால் உள்ளிட்ட 5 இந்தியர்கள் குடியரசு கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.