சென்னையில் நாளை 5 மணி நேரம் வாகன போக்குவரத்திற்கு தடை – காவல்துறை உத்தரவு!
தமிழக அரசு சென்னையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை இரவு 12 மணி முதல் 1ம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது
வாகன போக்குவரத்துக்கு தடை:
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது 34 பேருக்கு மேல் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வருகின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஓமைக்ரான் பாதித்த அனைத்து மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு அன்று ஸ்டார் ஹோட்டல்களில் பார்ட்டி கொண்டாட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் இசை நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – இன்று முதல் டோக்கன் விநியோகம்!
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்கள் தொற்று பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த பகுதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். இதனால் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாளை இரவு 12 மணி முதல் 1ம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளில் டிசம்பர் 31 ஆம் தேதி எந்த ஒரு கொண்டத்திற்கும் அனுமதி இல்லை மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது என்று மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஜனவரி 3 விண்ணப்பிக்க கடைசி தேதி!
இந்த நிலையில் நாளை இரவு 12 மணி முதல் 1ம் தேதி காலை 5 மணி வரை, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் பயணங்களை நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் அரசு அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாளை பொதுமக்கள் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.