அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் கோடை கால முகாம் – மாநில அரசு முடிவு!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 5 நாட்களுக்கு கோடை கால முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கோடைகால முகாம்:
தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு ‘நிபுன் ஹரியானா’ என்ற திட்டத்தின் கீழ் அடிப்படைக் கற்றல் மற்றும் எண்ணியல் (FLN) பயிற்சி முகாம்களை மாநிலக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கோடை விடுமுறையில் பயிற்சி முகாம்கள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று நாள் பட்டறையின் முதலாம் கட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது
இந்த நிலையில் மற்றொரு ஐந்து நாள் பயிற்சித் திட்டம் இப்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து குருகிராமில் உள்ள எஃப்எல்என் திட்டத்தின் நோடல் அதிகாரி மனோஜ் குமார் லக்ரா கூறுகையில், ‘ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குமான கோடை கால பயிற்சி வகுப்புகளின் இரண்டாம் கட்டத்தில், அனைத்து முதன்மை ஆசிரியர்களும் ஐந்து நாட்கள் பயிற்சி பெறுவது கட்டாயமாகும்.
Exams Daily Mobile App Download
இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் புதிய கல்வி அமர்வு ஜூலை 1 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.