தமிழகத்தில் மீண்டும் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் இன்று முதல் (பிப்.1) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேலும் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழகத்தில் மூன்றாம் அலையாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த வகையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மருத்துவ சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
மேலும் தொற்று பரவும் அச்சத்தால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அரசின் முயற்சியால் படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் அரசு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி இன்று முதல் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி TDS சலுகை! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது. பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகள் வாக்கு பதிவு மையங்களாக செயல்படவுள்ளதால் இந்த விடுமுறை தவிர்க்கப்பட முடியாதது என்று கூறப்படுகிறது. மேலும் பள்ளி ஆசிரியர்களும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.