தமிழக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை – குழப்பத்தில் மாணவர்கள்!
தமிழக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவலின் எதிரொலியாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது மட்டுமல்லாது இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இனி அனைத்து ஊழியர்களுக்கும் வார சம்பளம் – நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு!
இந்நிலையில், தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு நிறுத்தப்பட்டது . இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பணிகளில் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரே நாளில் அனைத்து இடங்களுக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான 31 சதவீத அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசுக்கு கோரிக்கை!
தேர்தல் நடைபெற இருப்பதால் வரும் பிப்ரவரி 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது போன்ற செய்திகள் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இது குறித்து அடுத்து வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.