தமிழகத்தில் பிப்.19 முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் பிப்.19 முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பிப்.19 முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பிப்.19 முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதியன்று நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அடுத்த ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளி விடுமுறை

தமிழகம் முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த பட்சத்தில் கடந்த 1ம் தேதி முதற்கொண்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மீண்டுமாக திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இடையில் கனமழை காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. என்றாலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 – ஆன்லைன் மூலம் நடத்த மாணவர்கள் கோரிக்கை!அரசின் முடிவு!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும், 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட உள்ளது.

தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கால அவகாசம் பிப்.18 வரை நீட்டிப்பு!

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பெரும்பாலான பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுள்ளன. இப்போது தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் காவல்துறையின் கைவசம் விடப்படும். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

அதன் படி, பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதாவது தேர்தல் 19ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருப்பதால் ஞாயிறு வழக்கமான விடுமுறை நாளாகும். தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!