ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5 நாட்கள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
எப்பொழுதும் ஏப்ரல் மாதத்தில் தான் அதிக அளவில் அரசு விடுமுறை இருக்கும். அந்த வகையில் தெலுங்கு வருடப்பிறப்பு, மகா வீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, சித்ரா பவுர்ணமி, ஷபே காதர் ஆகிய 5 முக்கிய தினங்களுக்காக அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை:
மற்ற 12 மாதங்களை விட ஏப்ரல் மாதத்தில் தான் அதிக அளவில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்தும் நடைபெறும். பல நாட்களாக மார்ச் மாதத்திலேயே பயணித்து கொண்டிருப்பது போல தோன்றுகிறது. எப்போது தான் ஏப்ரல் மாதம் பிறக்கும் என மக்கள் மாத காலண்டர் பக்கத்தை திருப்பியபடி இருந்திருப்பர். அதே போல ஒரு வழியாக மார்ச் மாதத்தை கடந்து ஏப்ரல் மாதத்தில் அடியெடுத்து வைத்துவிட்டோம். புதிதாக ஒரு மாதம் பிறந்தாலே அந்த மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்க்க மனது தேடும்.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – அரசாணை வெளியீடு!
அந்த வகையில் மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்கள் அரசு விடுமுறை என்பதை பார்க்கலாம். நாளை தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மகாவீரர் பிறந்த நாள் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாட இருப்பதால் ஏப்ரல் 14 வியாழக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வுகளில் புனித வெள்ளியும் ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட நாளான புனித வெள்ளியை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த புனித வெள்ளி ஏப்ரல் 15 அன்று கொண்டாட இருப்பதால் ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 16 சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி மற்றும் மார்ச் 28 வியாழக்கிழமை ஷபே காதர் ஆகிய இரண்டு நாட்களும் அரசங்கத்தால் விடுமுறை நாட்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.