5 நாட்கள் அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவிகளுக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 6 மாணவிகளுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பள்ளிக்கு 5 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தொற்று பாதிப்பானது வெகுவாக குறைந்திருக்கும் சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3ம் நாள் துவங்கி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரம் – இறுதி பட்டியல்!
அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மட்டும் சில நாட்களுக்கு விடுமுறைகள் விடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி துவங்கி தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவதற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை!
இந்நிலையில் மீண்டுமாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின், மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த சுமார் 6 மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்று உறுதியான பள்ளிக்கு இன்று (செப்டம்பர் 29) முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.