திருத்தணி முருகன் கோவிலில் 5 நாட்கள் பக்தர்களுக்கு தடை – கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் திருத்தணி முருகன் கோயிலில் ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் வருகைக்கு அனுமதி கிடையாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயில்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் ஓரளவு குறைந்து வருவதால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – விடுமுறை பட்டியல் வெளியீடு!
இதனால் அரசு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆடி கிருத்திகை என்பதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் இந்த சூழலில் மக்கள் கூடுவதால் கொரோனா மேலும் பரவ வாய்ப்புள்ளது. அதனால் ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆடி கிருத்திகை அன்று சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்படும். அதனால் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். திருத்தணி முருகன் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீட்டிலிருந்தே சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்டு கழித்து அருள் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.