தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
நாளை அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிலையில் பட்டவா்த்தி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் தொடா்பாக, இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும், பொது அமைதி, சமூக நல்லிணக்கத்தை காக்கும் விதமாக இன்று காலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்:
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர் சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய இவர், 1891, ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். இவரது பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதியை ஆண்டுதோறும் நாடு முழுவதும் சமூக நீதி தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் நடப்பு வருடம் நாளை ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்த தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாட்டிற்காக பாடுபட்ட தலைவா்களான மகாத்மா காந்தியடிகள், ஜவஹலால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கண்காணிப்பில் இருந்த 6000 பேர் விடுவிப்பு!
அதன்படி, அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் தொடா்பாக எந்த பிரச்னையும் வராமல் இருக்க இன்று (ஏப்.13) காலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு பிறப்பிக்க காரணம் என்னவென்றால், பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி இரு சமூகத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நாளை அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அனுமதி கேட்டிருந்தனா்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!
இதேநாளில் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி உற்சவம் நடத்த அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு சமூகத்தினா் அனுமதி கேட்டிருந்தனா். இந்த நிகழ்வுகளால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், குற்ற விசாரணை முறைச்சட்டம் 144(3)-இன் படி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு, மயிலாடுதுறை டிஎஸ்பி எம். வசந்தராஜ் கடிதம் அனுப்பியிருந்தார். எனவே அப்பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 17-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தலைஞாயிறு மதகடி பகுதியிலிருந்து 1 கி.மீட்டா் சுற்றளவுக்கு 2 நபா்களுக்கு மேல் கூடிநிற்கக் கூடாது என மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளாா்.