தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை? கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை? கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை? கல்வித்துறைதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை? கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை? கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் வருகிற அக்டோபர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. இருப்பினும் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வந்தது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் கல்வி சேனல் நடத்தி வந்தது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க உதவியாக இருந்தது. இதை அடுத்து இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சமூக ஆர்வலர்கள் வகுப்புகள் நடத்தி வந்தனர்.

மேலும் இந்த ஆண்டில் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து பள்ளிகள் அனைத்தும் நேரடி வகுப்புகள் மூலம் இயங்கி வருகிறது. இதனை தொடர்ந்து 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எளிதில் புரியும் விதத்தில் பாடங்களை நடத்த ஏதுவாக இருந்தது.

SBI வங்கியில் இனி ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்? தகவல் வெளியீடு!

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 1 -ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரையும், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாகவும், அதன் பிறகு பள்ளிகள் 6-ந்தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!