மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – மே 31ம் தேதி அறிவிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு - மே 31ம் தேதி அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு - மே 31ம் தேதி அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – மே 31ம் தேதி அறிவிப்பு?

சமீபத்தில் வெளிவந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் வரும் ஜூலை 2022 தவணைக்கான அகவிலைப்படி (DA) உயர்வு 4% ஆக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த புதிய அப்டேட் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு:

இப்போது அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மே மாதம் 31ம் தேதிக்கு முன் புதிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 2022க்கான அகவிலைப்படி தொகை இம்முறை 4% என அதிகரிக்க இருக்கிறது. இதற்கான ஏஐசிபிஐ குறியீட்டின் புதிய எண்கள் மே 31ம் தேதி வரவுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது வரை 34% அடிப்படையில் அகவிலைப்படி (DA) பணம் கிடைக்கிறது. இப்போது அடுத்த அகவிலைப்படி திருத்தம் 4% என அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது ஆகஸ்ட் 2022ல் அறிவிக்கப்படலாம்.

Exams Daily Mobile App Download

பொதுவாக 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்யப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 ஜனவரி தவணைக்கான அகவிலைப்படி 34% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு நன்றாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஏப்ரலில் வந்த ஏஐசிபிஐ குறியீடு 1% அதிகரிப்பை கண்டது. இதை தொடர்ந்து அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்பு மிக அதிகம் என தெரிகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் முடிவு இது தான்!

இப்போது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் பணவீக்க எண்கள் மே 31 அன்று வர உள்ளன. இதில், ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க எண்கள் புதுப்பிக்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை 3 மாதங்களுக்கான தொழிலாளர் அமைச்சகத்தின் எண்கள் வந்துள்ளன. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சிறிது சரிவு ஏற்பட்டது. ஆனால், மார்ச் மாதத்தில் ஒரு பெரிய உயர்வுடன் குறியீடு 1 புள்ளி அதிகரித்து 126 ஆக உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த அகவிலைப்படி தொகை 4% வரை அதிகரிக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அடுத்த மூன்று மாதங்களில் குறியீட்டு எண் ஏற்றம் காட்டினால் டிஏ உயர்வும் 4% ஆக இருக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!