7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ரூ.49420 சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

0
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ரூ.49420 சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ரூ.49420 சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ரூ.49420 சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களின் fitment factor 2.57 லிருந்து 3.68 ஆக உயர்த்தப்படுவது வரும் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த fitment factor உயர்வால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

சம்பளம் உயர்வு :

மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடையும் அளவுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தங்களுக்கான அடிப்படை சம்பளமும், அகவிலைப்படியும் உயர்த்தப்படும் என எதிர்பார்ப்புடன் மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அகவிலைப்படி உயர்வு மற்றும் அடிப்படை சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சுரேஷ் ரெய்னா கொடுத்த அப்டேட்! அடுத்த கேப்டன் இவர் தான்?

இந்த வகையில் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு Fitment factor 2.57இல் இருந்து 3.68ஆக உயர்த்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களிடம் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைப்படி fitment factor உயர்த்தப்பட்டால் ஊதியத்தில் தானாக 800 ரூபாய் உயரும் என்பது குறிப்பிட வேண்டியவை. மேலும் அடிப்படை சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 26000 ரூபாயாக உயரும். இந்த fitment factor காரணி உயர்வை குறைந்தப்பட்சம் 18000 சம்பளத்துடன் பெருக்கினால் ரூ.49420 ஆக உயர்த்தப்படும். இதே அதிகபட்சம் 2.5 லட்சம் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 90,000 ரூபாய் வரை உயர்வு இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த மாதத்தில் மிகப்பெரிய அளவில் சம்பள அதிகரிப்பு இருக்கலாம். மேலும் அடிப்படை சம்பளம் மட்டுமல்லாமல் அகவிலைப்படி உயர்வு குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூன் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. எனவே, விரைவில் அகவிலைப்படி பற்றிய அறிவிப்பையும் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சம்பள உயர்வு அறிவிப்பு மார்ச் 31க்குள் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!