Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ரூ.49 ரீசார்ஜ் திட்டம் நிறுத்தம்!
ஏர்டெல் தனது ரூ.79 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரீசார்ஜ் திட்டம்:
முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளருக்கு ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஊரடங்கு காலத்தில் மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் இணையதள பயன் கருதியும் குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஏர்டெல் நிறுவனம் வழங்கிய தனது 3 ப்ரீபெய்ட் பிளான்களை நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.128 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
சென்னையில் ஜூலை 30 மின்தடை ஏற்படும் பகுதிகள்- மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் மலிவான ரீசார்ஜ் திட்டமான ரூ.49 ஐ நிறுத்தியது. இந்த ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 38.52 மதிப்புள்ள வாய்ஸ் கால்கள் மேலும் மொத்தமாக 100 எம்பி டேட்டாவையும் வழங்குகிறது. அதன் பிறகு ரூ.456 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமானது. இதில் 50 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற அம்சங்கள் இடம் பெற்றது. இது 60 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். புதிதாக ரூ.79 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள அறிமுகப்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தற்போது ரூ.79 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்போது ப்ரீபெய்ட் பேக்குகள் ரூ.79 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்திலிருந்து தொடங்குகின்றன. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது. இதில் டபுள் டேட்டா வசதியும் நான்கு மடங்கு அதிகமான அவுட்கோயிங் அழைப்புகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் 79 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 200 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது.