தமிழகத்தில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர்!

0
தமிழகத்தில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி - கூட்டுறவுத்துறை அமைச்சர்!
தமிழகத்தில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி - கூட்டுறவுத்துறை அமைச்சர்!
தமிழகத்தில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர்!

கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரனுக்கும் குறைவாக அடகு வைத்திருப்பவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

ஏழை எளிய மக்களின் குடும்ப சுமையை குறைக்கும் பொருட்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில், 5 சவரனுக்கும் குறைவாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நகைக்கடன் தள்ளுபடியில் பல விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பல நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

குற்றஉணர்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளும் இனியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரும் எபிசோட்!

அதாவது ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் இந்த நகைக் கடன் தள்ளுபடியை பெற முடியாது எனவும், வீட்டில் ஒருவருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும் எனவும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் பல நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. 48 லட்ச மக்களுக்கு நடைக்கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் 13 லட்ச ஏழை எளிய மக்கள் மட்டுமே அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நகைக்கடன் வாங்கும் பட்டியலில் இடம் பிடித்தனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைத்த நகைகள் மக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் மட்டுமே ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். அதாவது ஒரே வாரத்தில் மட்டுமே 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!