SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் – ரூ. 41,000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு :
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுபடுகளால் கடந்த இரண்டு வருடங்களாக வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணிகள் தேர்வாணையமான SSC பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5000 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. நடப்பாண்டு இப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து வங்கி துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. காலியாக உள்ள 641 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சேனல் மேலாளர் (CMF-AC) பதவியில் 503 காலியிடங்கள் உள்ளது.
TET தேர்வர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
இப்பணிக்கு மாதம் ரூ.36,000 ஊதியம் வழங்கப்படும். அடுத்ததாக சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் பதவியில் 130 பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு ரூ.41,000 ஊதியம் வழங்கப்படும். எனி டைம் சேனல்கள் (CMS-AC) பதவிகளும் உள்ளன. இவை சேனல் மேலாளர் நிலையை சார்ந்தவை. அடுத்தாக, உதவி நிலையில் உதவி அதிகாரி (SO-AC) பதவிகள் 8 என மொத்தம் 641 காலிப்பணியிடங்கள் உள்ளது. உதவி அதிகாரிக்கு ரூ. 41,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த பிற தகவல்களுக்கு இணையத்தளத்தை பார்வையிடலாம்.