தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 470 பேர் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவி வந்த கொரோனா பரவல் அரசின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் வழக்கம் போல் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதாவது, தினசரி கொரோனா பாதிப்பு கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,70,567 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 84, செங்கல்பட்டு 28, கோவை 64, ஈரோடு 34, கிருஷ்ணகிரி 19, சேலத்தில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 38,036 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் 35,27,521 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,010 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா முதன்முதலாக பரவத் தொடங்கிய நாடான சீனாவில் மீண்டும் கொரோனா அலை வீச தொடங்கியுள்ளதால், உலக சுகாதார நிறுவனம் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்