தமிழக ரேஷன் கடைகளில் இலவச மளிகை பொருட்கள் – இதுவரை 47.16% விநியோகம்!
கொரோனா நிவாரண பொருட்களாக தமிழக குடும்பஅட்டைதாரர்களுக்கு 14 வகையான இலவச மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டங்கள் தோறும் இதுவரை 47.16 சதவீதம் பேருக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இலவச பொருட்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் பணமும், 14 வகையான இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும் என கடந்த மாதம் மாநில அரசு அறிவித்தது. அந்த வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு தவணைகளாக நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசின் உத்தரவின் படி இலவச மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் பணிகள் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெற்று வருகிறது.
தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன் அடிப்படையில் இதுவரை 47.16% பேருக்கு இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. முன்னதாக இலவச மளிகை பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு கடந்த 11 ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, ஜூன் 15 முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் துவங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த அடிப்படையில், நேற்று (ஜூன் 21) வரை 47.16% பேருக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலவச பொருட்களின் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்றபடி மளிகை பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி தொலைவில் உள்ள சில மாவட்டங்களுக்கு இந்த பொருட்கள் கொண்டு சேர்ப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
எனினும் இரண்டாம் தவணையாக, 2 ஆயிரம் நிவாரண நிதி பெரும்பாலான அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இவை வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 2,09,55,214 ரேஷன் கார்டுகள் உள்ளது. இவற்றில் 98,82,903 கார்டுகளுக்கு இதுவரை இலவச மளிகை பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று (ஜூன் 21) வரை 47.16 % குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.