இன்று நாடு முழுவதும் 46 பேருக்கு நல்லாசிரியர் விருது – குடியரசுத்தலைவர் வழங்கல்!

0
இன்று நாடு முழுவதும் 46 பேருக்கு நல்லாசிரியர் விருது - குடியரசுத்தலைவர் வழங்கல்!
இன்று நாடு முழுவதும் 46 பேருக்கு நல்லாசிரியர் விருது - குடியரசுத்தலைவர் வழங்கல்!
இன்று நாடு முழுவதும் 46 பேருக்கு நல்லாசிரியர் விருது – குடியரசுத்தலைவர் வழங்கல்!

இந்தியா முழுவதும் இன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 46 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.

ஆசிரியர் தினம்:

இந்தியா முழுவதும் செப்டெம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக அரசு அனுசரித்து கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பலகட்ட கலந்துரையாடல்களுக்கு பிறகு சிறந்த ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்படும். மேலும் இந்த விருதை பெறும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க பல்வேறு விதிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் தொடக்க நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 5 ம் நாளான இன்று நல்லாசிரியர் விருது வழங்க ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 45 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதை வழங்க இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

அமிர்தாவின் திருமணம் பற்றி யோசிக்கும் குடும்பம், தொழிலை விடாமல் செய்ய முடிவு செய்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

மேலும் இந்த விருதுக்காக நடப்பு ஆண்டில் இணையதளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உட்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!