TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
சப் இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களுக்கான அறிவிப்பை TNUSRB சமீபத்தில் வெளியிட்டது. தற்போது SI எழுத்து தேர்விற்கான தேதியையும், அந்த தேர்விற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
சப் இன்ஸ்பெக்டர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தற்போது சப் இன்ஸ்பெக்டர் (SI) பணிக்கு உள்ள 444 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) பணிக்கு 399 காலியிடங்களும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணிக்கு 45 காலியிடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!
அதாவது, காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR)க்கான தேர்வு ஜூன் 25 மற்றும் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாக இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
ExamsDaily Mobile App Download
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஜூலை 1 ஆம் தேதி 2022 ன் படி, குறைந்தது 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ரூ.500 செலுத்தி இந்த விண்ணப்பங்களை விண்ணப்பித்துக்கொள்ளலாம். எழுத்து தேர்வு அடிப்படையில் தான் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்து தேர்விற்கு பிறகு உடல் திறன் தேர்வு (PET), உடல் அளவீட்டுத் தேர்வு (PMT), சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகிய தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்பு, Viva- Voce நடைபெறும் நடைபெறும். இந்த அனைத்து தேர்விலும் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.