இந்தியாவில் 44 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!
உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஓமைக்ரான் தொற்று அதிகமாகி வருகிற நிலையில் இந்தியாவிலும் அதன் பரவல் வேகமெடுத்து உள்ளது. தற்போது வரை 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஓமைக்ரான் தொற்று:
ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் நாட்கள் கூடக்கூட ஓமைக்ரான் வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்து உள்ளது. மேற்கு பகுதியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் 9 ஆக இருந்த ஓமிக்ரான் தொற்று, மேலும் நான்கு பேருக்கு பரவி மொத்தம் 13 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
மராட்டியத்தில் அதிகமாக தொற்று பரவி வந்த நிலையில் மேலும் 2 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அங்கு 20 ஆக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து லத்தூரிலும், புனேவிலும் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 18 ஆக இருந்த ஓமிக்ரான் தொற்று தற்போது 20 ஆக அதிகரித்துள்ளது. கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஆகிய மூன்று மாநிலத்திலும் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
மதுரையில் நாளை (டிச.15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மேலும் 2 பேருக்கு, குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் வேரியண்ட் தொற்று மிகவும் வேகமாக பரவும் ஆற்றலை உடையது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. எனவே இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.