தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பில், ரேஷன் கடைகள் தரத்தை உயர்த்துவது குறித்து பேட்டி அளித்தார். மேலும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அவர் கூறினார்.
ரேஷன் கடைகள்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்ட துவக்க விழா மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் துறை சார்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். குடும்ப அட்டை வேண்டி மனு அளிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்ற முதல்வரின் ஆணையின் படி மனு அளித்த 7 லட்சம் பேரில் மூன்றரை லட்சம் குடும்ப அட்டைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டு விட்டது.
ஆகஸ்ட் 8ம் தேதி முழு ஊரடங்கு, இன்று முதல் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
மேலும் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து மே மாதத்தில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 1,800 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இதுவரை 1,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 937 டன் அரிசி மற்றும் 7 ஆயிரத்து 253 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தலைமை இயக்குனர் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்திற்கு 28 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படும் நிலையில் 7,500 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகம் முழுவதும் 8000 ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்பட்டு வரும் கட்டிடங்களை சொந்த கட்டிடங்களை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில் நியாய விலை கடைகளில் காலியாக இருக்கும் 4000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் கூறினார்.