Flipkart நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

0
Flipkart நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு - புதிய அறிவிப்பு!
Flipkart நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு - புதிய அறிவிப்பு!
Flipkart நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

அடுத்த மாதங்களில் வர இருக்கும் பண்டிகை கால தேவைகளை நிறைவேற்றும் வகையில் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் நிறுவனம் சுமார் 4,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.

புதிய வேலைவாய்ப்புகள்

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி இ-காமர்ஸ் தளமான Flipkart, வரவிருக்கும் பண்டிகை காலங்களில் தனது வாடிக்கையாளர்களின் சேவைகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய பணியமர்த்தலை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் தனிநபர்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக ‘பிளிப்கார்ட் எக்ஸ்ட்ரா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் மலிவு விலை குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

அதன் கீழ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ‘பிளிப்கார்ட் எக்ஸ்ட்ரா’ என்ற ஆப் மூலம் ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பின்னணி சரிபார்ப்புக்குப் பிறகு, விண்ணப்பதாரர்கள் டெலிவரி நிர்வாகிகள், சேவை பங்காளிகள் அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதாவது பண்டிகை காலம் மற்றும் நிறுவனத்தின் பிக் பில்லியன் நாட்களை முன்னிட்டு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தனிநபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பிளிப்கார்ட் கூடுதல் வேலைவாய்ப்புகளை அளிக்க இருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவரும், விநியோகத் தலைவருமான ஹேமந்த் பத்ரி கூறுகையில், ‘விற்பனையாளர்கள், கைவினைஞர்கள், MSMEகள், கிரணாஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை உருவாக்க பிளிப்கார்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

நாங்கள் எங்கள் கூட்டாண்மையின் நோக்கத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம். பிளிப்கார்ட் எக்ஸ்ட்ரா திட்டத்தின் மூலம் தனிநபர்கள், உள்ளூர் கடைகள் மற்றும் சேவை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வருவாய் வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். இதனுடன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பேஷன் இ-காமர்ஸ் தளமான மிந்த்ரா தனது நெட்வொர்க்கை சுமார் 25,000 கடைகளுக்கு விரிவுபடுத்துவதாகவும், பண்டிகை காலத்திற்கு முன்னதாக 11,000 பேரை வேலைக்கு அமர்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.

அக்.1 முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடல் – அரசு முடிவு!

மேலும், பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிர்வகிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும் தொடர்பு மைய திறனை அதிகரிக்க சுமார் 2,700 பேரை பணியமர்த்த இருப்பதாகவும் மிந்த்ராவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த மாதங்களில் வர இருக்கும் பண்டிகை காலத்திற்கு, சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்களால் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான டெலிவரிகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று இந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!