பிளிப்கார்ட் நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு – மஹாராஷ்டிராவில் உருவாக்கம்!

0
பிளிப்கார்ட் நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - மஹாராஷ்டிராவில் உருவாக்கம்!
பிளிப்கார்ட் நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - மஹாராஷ்டிராவில் உருவாக்கம்!
பிளிப்கார்ட் நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு – மஹாராஷ்டிராவில் உருவாக்கம்!

பிரபல ஆன்லைன் வணிக தலமான பிளிப்கார்ட் நிறுவனம், கிட்டத்தட்ட 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வசதிகளுடன் கூடிய கட்டிடங்களை மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைத்து வருகிறது. இதன் மூலம் சுமார் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வேலை வாய்ப்புகள்

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், மஹாராஷ்டிராவில் புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய விநியோக சேவைகளை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிகளைச் சேர்ப்பதன் மூலம் அம்மாநிலத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விரைவான மற்றும் தடையற்ற முறையில் சேவை செய்வதற்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் என தெரிவித்துள்ளது. அதன் படி பிவாண்டி மற்றும் நாக்பூர் பகுதிகளில் அமைந்துள்ள புதிய கட்டமைப்பு வசதிகள் சுமார் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆக.20ம் தேதி இறுதி முடிவு – அமைச்சர் அறிவிப்பு!

அதே நேரத்தில் இவை 4,000 நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம் கடந்த ஆண்டில் மட்டும் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பிளிப்கார்ட் ஒரு உள்நாட்டு இ-காமர்ஸ் நிறுவனமாக, உள்ளூர் MSMEக்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் பின்தங்கிய சேவை சமூகங்களுக்கு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிப்பதற்காக மஹாராஷ்டிராவில் உள்கட்டமைப்பு மற்றும் விநியோக சேவையில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம்’ என்று அதிகாரி ரஜினீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட் நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட திருப்தி மற்றும் வரிசைப்படுத்தல் மையங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விரிவாக்கம் அமேசான், ரிலையன்ஸ் ஜியோமார்ட் மற்றும் டாடாவுக்கு சொந்தமான பெரும் நிறுவனங்களுடன் போட்டியிடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக அமேசான் நிறுவனம் அதன் நெட்வொர்க்கை இந்தியாவில் விரிவுபடுத்தும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிறுவனத்தின் சேமிப்பு திறன் கடந்த வருடத்தை விட கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளது முக்கியமான ஒன்றாகும்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் Amazon சுமார் 15 மாநிலங்களில் 43 மில்லியன் கன அடிக்கும் அதிகமான சேமிப்பு திறனைக் கொண்டிருக்கிறது. தவிர இந்தியா முழுவதும் சுமார் 850,000 விற்பனையாளர்களை இது ஆதரிக்கிறது. இது தவிர பிளிப்கார்ட்டின் நாடு முழுவதுமான சேவைகளுக்கு சரக்குகளின் தடையற்ற நகர்வை உறுதி செய்வதற்கு உகந்த மையங்களில் ஒன்றாக மஹாராஷ்டிராவும் கருதப்படுகிறது. சமீபத்திய சேர்க்கைகள் மற்றும் தற்போதுள்ள வசதிகளின் விரிவாக்கத்துடன், பிளிப்கார்ட் மகாராஷ்டிராவில் மொத்தம் 12 சப்ளை வசதிகளை 23 லட்சம் சதுர அடி பரப்பளவில் கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில் இது 20,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், ‘மஹாராஷ்டிரா மாநிலத்தின் மிகவும் கவர்ச்சிகரமான முதலீடுகளில் ஒன்றாக பிளிப்கார்ட் இருக்கிறது’ என தெரிவித்திருந்தார். மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா பேரிடர்களுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் பிளிப்கார்ட் முக்கிய பங்கு வகித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு பிளிப்கார்ட் செயலி சுமார் 11 இந்திய மொழி இடைமுகங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!