தமிழக அரசு கல்லூரிகளில் 4000 ஆசிரியர் பணியிடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணலுக்குப் பதிலாக போட்டித் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தேர்வின் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை மாநில அரசு நிரப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.
4000 உதவிப்பேராசிரியர்கள்:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வுக்கு பதிலாக தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்வின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை மாநில அரசு நிரப்பும் என்றும், இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,331 காலியிடங்களை அறிவித்து, நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. பணி அனுபவத்திற்கான மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2012ல் பணியில் சேர்ந்த 955 உதவிப் பேராசிரியர்களின் பணியை முறைப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
TNTET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த சந்திப்பில், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பு பணிக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்