மத்திய அரசு சார்பில் ரூ.4000 கூடுதல் உதவித்தொகை – ஜூன் 30 கடைசி நாள்!

1
மத்திய அரசு சார்பில் ரூ.4000 கூடுதல் உதவித்தொகை - ஜூன் 30 கடைசி நாள்!
மத்திய அரசு சார்பில் ரூ.4000 கூடுதல் உதவித்தொகை - ஜூன் 30 கடைசி நாள்!
மத்திய அரசு சார்பில் ரூ.4000 கூடுதல் உதவித்தொகை – ஜூன் 30 கடைசி நாள்!

பிரதமர் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள், ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உதவித்தொகை

நாடு முழுவதும் உள்ள தகுதியுடைய விவசாயிகளுக்கு ‘பிரதமர் கிஷான் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி இதுவரை 8 தவணைகள் வீதம், சுமார் 16 ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைந்துள்ளனர். மேலும் இதுவரை நாடு முழுவதும் உள்ள 9.5 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்ற கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாகவே அனுப்பப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கல் – முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் ‘பிரதமர் கிஷான் யோஜனா’ திட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு இரண்டு தவணைகளின் கூடுதல் தொகை கிடைக்கவுள்ளது. பிரதமர் கிஷான் யோஜனா திட்டத்தின் 8 ஆவது தவணை சென்ற மே மாதம் முதல் துவங்கியுள்ளதால், ஜூலை 31 வரை கொடுக்கப்படும் 8 ஆவது தவணையில் முதல் தவணையாக 2000 ரூ, ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை 2 ஆம் தவணையில் 2 ஆயிரம் ரூ, டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை 3 ஆம் தவணையாக 2 ஆயிரம் ரூ வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

இத்திட்டத்தின் 9 ஆவது தவணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில் ஜூலை 30க்கு முன்னாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 2 ஆம் தவணை ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும். இதன் கீழ் ஒரு விவசாயிக்கு 4 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்க உள்ளது. எனவே பயிரிடக்கூடிய விவசாய நிலங்களை வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள், மத்திய அரசின் திட்ட நிலவரங்களை pm-kisan செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!