தமிழகத்தில் ரூ.4000 கொரோனா நிவாரண நிதி திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் புதிய திட்டம் ஒன்றை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் 13,553 இலங்கை தமிழ் குடும்பங்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவி வந்ததால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடந்த மே 10ம் தேதி முதல் கொரோனா முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உள்ளதால், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த திட்டம் இரண்டு தவணைகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசுக்கு பரிந்துரை!
இந்நிலையில், தமிழகத்தில் முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கும் புதிய திட்டத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து ஐந்து நபர்களுக்கு வழங்கி முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் இது பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் ரூ.5,42,13,000 மதிப்பீட்டில் 13,553 முகாமிற்கு வெளியில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பங்கள் பலனடைய உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டம் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் பலனடைந்த இலங்கை தமிழர் ஒருவர், அகதிகள் முகாமில் உள்ள குடும்பங்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், முகாமிற்கு வெளியே உள்ள தமிழர்களின் நலனையும் கவனத்தில் கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.