தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் – ஒரு ஏக்கருக்கு ரூ. 400 மானியம்! பயனடைய வேண்டுகோள்!

0
தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் - ஒரு ஏக்கருக்கு ரூ. 400 மானியம்! பயனடைய வேண்டுகோள்!
தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் - ஒரு ஏக்கருக்கு ரூ. 400 மானியம்! பயனடைய வேண்டுகோள்!
தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் – ஒரு ஏக்கருக்கு ரூ. 400 மானியம்! பயனடைய வேண்டுகோள்!

தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் சாகுபடிக்கு மானியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் விவசாயிகள் பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மானிய உதவி:

தமிழகத்தில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் முதன் முறையாக தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. அதில் வேளாண் தொழிலை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் இடம் பெற்றது.

முன்னணி ஐடி நிறுவனத்தில்….3900 பணியாளர்கள் நீக்கம் – இது தான் காரணம்! CEO விளக்கம்!

Follow our Instagram for more Latest Updates

அதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் காப்பீடு, பயிர் கடன் உள்ளிட்ட வசதிகளை அளித்து வருகிறது. அண்மையில் விவசாயிகள் புதிய மின் மோட்டார்கள் வாங்குவதற்கு ரூ. 10,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது உளுந்து, பச்சைப்பயறு சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 400 மானியம் வழங்கப்படவுள்ளது.

இதன் கீழ் பயன்பெறுமாறு அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உளுந்து சாகுபடியை அதிகப்படுத்துவதும் 50% மானியத்தில் பயறு விதைகளை வழங்குவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முதல் கட்டமாக ரூ.17 கோடி வழங்கியுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 389 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!