தமிழகத்தில் 2 துணை மின் நிலையங்களில் 40 காலிப்பணியிடங்கள் – மின்வாரியம் அனுமதி!!
தமிழகத்தில் உள்ள முக்கிய 2 துணை மின் நிலையங்களில் தலா 20 சதவிகிதம் என 40 பணியிடங்களை உருவாக்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
துணை மின் நிலையங்கள்:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிகமாக மின்தடை ஏற்படுகிறது. கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாதது தான் இந்த மின்தடைக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் சேர்க்கை – ஜூலை 12 வரை விண்ணப்ப பதிவு!
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு, செலவினங்களையும், குறைந்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட துணை மின் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் 92 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது 2 துணை மின்நிலையங்களில் தலா 20 வீதம் 40 பணியிடங்களை உருவாக்க மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக சென்னை மின்வாரிய தலைமையகத்திலுள்ள வளிகாப்பு, மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையங்களில் புதிய காலி பணியிடங்களை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.