சபரிமலையில் 40,000 பக்தர்களுக்கு அனுமதி, ஆன்லைன் முன்பதிவு – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

0
சபரிமலையில் 40,000 பக்தர்களுக்கு அனுமதி, ஆன்லைன் முன்பதிவு - அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
சபரிமலையில் 40,000 பக்தர்களுக்கு அனுமதி, ஆன்லைன் முன்பதிவு - அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
சபரிமலையில் 40,000 பக்தர்களுக்கு அனுமதி, ஆன்லைன் முன்பதிவு – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு இடையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தினசரி 40,000 பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கேரள தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சபரிமலை தரிசனம்:

நவம்பர் மாதத்தின் ஆரம்பம் முதல் கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சபரிமலை கோயில் உள்ள பத்தினம் திட்டா மாவட்டத்திற்கு செல்லும் வழிகளில் மண்சரிவு போன்ற பாதிப்புகள் இருந்ததால் பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியது. மற்ற மாதங்களை விட கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு வரும் பகதர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் தரிசனத்திற்கு தடை அறிவித்ததால் பக்தர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!

தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு நவம்பர் 15ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தினசரி நடந்து வருகிறது. இதனால் அங்கு ஆன்லைன் மூலம் 30,000 பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கேரள தேவஸ்தான துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்கள், எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி தொடர்பாக ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பம்பை நுணங்கார் பகுதியில் பக்தர்களின் வருகைக்காக தற்காலிக பாலம் கட்டும் பணிகளை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அப்போது கேரள சபரிமலையில் தினசரி பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் பதிவு மூலமாக 40,000 பேர் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடனடி முன்பதிவு மூலம் தினசரி 5,000 பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தற்போது 300 வாடகை அறைகள் தயாராக உள்ளது. மேலும் 200 அறைகள் விரைவில் தயாராகி விடும். பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் அதில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படும் என்று கேரள தேவஸ்தான அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!