புதிய நிதியாண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு – மேக்ஸ் லைஃப் திட்டம்!
தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான மேக்ஸ் லைஃப் இந்த நிதியாண்டில் 40,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாகவும், அந்த செயல்முறையை டிஜிட்டல் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நடப்பு நிதியாண்டில் ஏறக்குறைய 40,000 முகவர் ஆலோசகர்களை பணியமர்த்த இலக்கு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஆட்சேர்ப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் விரைவான தடையற்ற வகையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வகை முறை மூலம் கடந்த நிதியாண்டில் 23,000க்கும் மேற்பட்ட முகவர் ஆலோசகர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை – தேனி, சிவகங்கை மருத்துவ கல்லூரிகள் தேர்வு!
அந்த வகையில் இந்நிறுவனம் கடந்த ஆண்டில் பெற்ற வெற்றிகளை அடிப்படையாக கொண்டு அதிக பலத்துடன் திறன்களை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் வி.விஸ்வானந்த் கூறுகையில், ‘மேக்ஸ் லைஃப் நிறுவனத்தில் புதிய பணியாளர்களின் டிஜிட்டல் ஆட்சேர்ப்பு செயல்பாடுகள், வணிகத்தில் உயர்தர திறமைகளை கொண்டு வர உதவியது.
TN Job “FB Group” Join Now
அது மட்டுமல்லாமல் சுறுசுறுப்பு, வேகம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பிரதிநிதிகளை பணியமர்த்துவதில் இதன் பங்கு அவசியமாக இருந்தது’ என குறிப்பிட்டுள்ளார். இந்நிறுவனம் சமீபத்தில் ‘மேக்ஸ் லைஃப் ஏஸ் டாக்’ என்ற ஏஜென்சி சேனலுக்கான புதிய பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த டாக் சீரிஸ் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்நிறுவனத்திற்கு வரவிருக்கும் புதிய ஊழியர்களுக்கு, மேக்ஸ் லைப்பின் முகவர் ஆலோசகர்கள் உத்வேகமூட்டும் கதைகளை வெளிப்படுத்தி இதன் மூலம் புதிய பணியாளர்களை ஊக்கப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Nice