மாநில அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு – முழு விபரங்கள் இதோ!
உத்தரபிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அம்மாநில அரசு ஏற்கனவே தொடங்கி விட்டது. இத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இதற்கு முன் பல்வேறு அறிக்கைகளை தெரிவித்த நிலையில் தற்போது பெண்களுக்கான முக்கியமான திட்டத்தை வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்:
உத்தரபிரதேசத்தில் இந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு சட்டசபை அடுத்த மாதம் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தல் மார்ச் மாதம் 10 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அதிக கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு அறிக்கைகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது.
கொரோனா காரணமாக வார இறுதி ஊரடங்கு தொடரும் – மாநில அரசு அறிவிப்பு!
இதற்க்கு முன் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வந்தார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு கட்சி, பெண்களை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். தற்போது பெண்களுக்கான முக்கியமான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சுய மரியாதை, தற்சார்பு, கல்வி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என 6 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மேலாண்மை ஆணையம் வலியுறுத்தல்!
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிக்கை தெரிவித்திருக்கிறது. இதை தொடர்ந்து காவல் துறையில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஆரம்ப பள்ளிகளில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஸ்டார்ட் அப் நிதியாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.